டூ லேட்
05 செப்டம்பர் 2009
அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.

வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை சந்திப்பதாக இருந்தது. இப்போது மணி மத்தியானம் இரண்டு.
''இன்னும் திருந்தலையா நீ?''
கிச்சாமி
25 ஆகஸ்ட் 2009
அமெரிக்காவே ஆனாலும் சரி, நான்கு நண்பர்கள் கூடுமிடத்தில் கி்ச்சாமி மாதிரி ஒரே ஒரு அப்பாவியாவது இருப்பான்.
இவ்வளவு பரந்த தேசத்தில் கணவர் மனைவிகளே தாயக்கட்டையை வீசிப் போட்ட மாதிரி கிழக்கும் மேற்குமாய் வீசியெறியப்பட்டு, வாரக்கடைசி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, தெய்வ சங்கல்பத்தில் நண்பர்கள் எட்டுப் பேர் வாஷிங்டன் டிசிக்குப் பக்கத்தில் ஒரே ஊரில் மாட்டிக் கொண்டோம்.
வெள்ளிக்கிழமை இரவுகளிலும், சனிக்கிழமை இரவுகளிலும் பஃபல்லோ விங்ஸ் மாதிரி பார் அட்டாச்டு உணவகங்களில் கையில் கோப்பையோடு எங்களைப் பார்க்காவிட்டால் அன்றைக்கு இடியுடன் கூடிய பலத்த மழை நிச்சயம் பெய்யும்.
எக்ஸானந்தா
1 ஆகஸ்ட் 2009
ரூம் மேட் பலராமனால் வந்த வினை. சுவாமி எக்ஸானந்தாவின் அதி தீவிர பக்தன். ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஒரு ஃபார் லூப் எழுதுவது கூட அவரின் மகிமையால்தான் என்று பலமாக நம்பிக் கொண்டிருக்கிறான். டெஸ்க்டாப்பிலிருந்து, பர்சுக்குள் வரை அவனிடம் அவர் திருவுருவப் படம்.

எக்ஸானந்தா பக்தர்களுக்கு அருள் பாலிக்க அமெரிக்கா வரும்போதெல்லாம் பலராமன் பிசி ஆகி விடுவான். போஸ்டர் ஒட்டுவதிலிருந்து சுவாமிகளும், அவர் அடிபொடிகளும் தங்க இடம் பார்ப்பது வரை பம்பரமாய் சுழல்வான்.
அப்போதெல்லாம், ''வா திருச்சேவை செய்யலாம்.'' என்று என்னை அழைத்திருக்கிறான்.
போன வருஷம் என்றால் திமிராக பேசியிருப்பேன்.
கடல் கடந்தவன்
27 ஜூலை 2009
அவன் கண்கள் ஆடாமல் அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.

சாலையோரமாய் இருந்த பேக்கரி அருகே சுவரில் தன்னை முட்டுக் கொடுத்து நின்றிருந்தான். இடது கையில் பிடித்திருந்த பிளாஸ்டிக் கப்பில் கொஞ்சம் சில்லரைகள். கிழிந்த சர்ட்டிலும், பேன்ட்டிலும் சுரண்டினால் வருமளவுக்கு அழுக்கு. எத்தனை கூட்டத்திலும், யாரையும் பார்த்து விடுமளவுக்கு உயரமாக இருந்தான். கை கால்கள் குச்சி குச்சியாய் இருந்தன. ஒடுங்கின முகத்தில் துவங்கிய மீசையும், தாடியும் நெஞ்சு வரை நீண்டன. எண்ணெய் காணாமல் பழுப்படித்து ஒன்றோடொன்று ஒட்டிக் கிடந்த பரட்டைத் தலைமுடி. பிளந்திருந்த தடிமனான உதடுகளுக்குள் மஞ்சளாய் கறை படிந்த பற்கள். மேலுதட்டையும், கீழுதட்டையும் தொட்டுக் கொண்டு பளபளத்தன ஓரிரு எச்சில் கம்பிகள்.
வளசரவாக்கத்திலிருந்து வாஷிங்டன் டி.சிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. இங்கே எல்லாமே சரி; இந்த ரோட்டோர ஆசாமியைத் தவிர.
பாண்டேஜ்
18 ஜூலை 2009
என்னைச் சுற்றி கொழகொழவென ரத்தம்.
நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தேன். வேகமாய் கண்களில் பரவியது இருள். பென்சில்வேனியா தெருவை பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் கடக்க முயலும் போது, தேங்கிக் கிடந்த கார்களுக்கு நடுவே திடீரென முளைத்த மோட்டார்பைக்கை நானும், நடந்து செல்லும் என்னை பைக் ஆசாமியும் பார்த்து அதிர்ச்சியடைந்ததுதான் தெரியும்.
அடிபட்ட நானும், அடித்த அவனும் பெரிய ஓலத்தோடு ரத்தம் சிதற ஆளுக்கொரு திசையில் தெறித்தோம்.
நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு
12 ஜூலை 2009
காருக்குள் கலர் கலராய் வெளிச்சமடிக்க, ''டேய் கோபி, போலீஸ்டா!'' - செல்போனில் அலறினேன். நட்ட நடுநிசியில் 95 நெடுஞ்சாலையில் விர் விர்ரென பறக்கும் இத்தனை கார்களுக்கு நடுவில் - தட்டுத் தடுமாறி ஓட்டிச் செல்லும் நானா கிடைத்தேன்?
''பதறாதே. ஓரங்கட்டி நிறுத்து.'' என்று ஆலோசனை வழங்கினான் கோபி.
''இலக்கியம் வெங்காயமெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லயே சொன்னேன். கேட்டியா நீ?''
ஒன்பதிலிருந்து ஐந்து வரை
அலாரம் அடித்தவுடன் எழும் ஒழுக்கம் எத்தனை வருடம் ஆனாலும் வர மறுக்கிறது. தினமும் ரயிலில் பார்க்கும் இந்தியனின் குடும்பம் மொத்தமும் காலையில் எழுந்தவுடன் குளித்து விடுமாம். நல்ல வேளை அந்த மாதிரி கெட்ட பழக்கம் எனக்கோ, லிண்டாவுக்கோ இல்லை.
லிண்டா இன்று சீக்கிரம் எழுந்து விட்டாள் போலிருக்கிறது. ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்ட பீங்கான் கிண்ணத்தை சின்க்கில் எறிந்து விட்டு, ஆரஞ்சு ஜூசை உறிஞ்சினாள். அவள் பக்கத்தில் சின்னவள் சிரியல் பாரை கடித்துக் கொண்டு தெரிந்தாள்.
மன்னிக்கவும்…
கடிதத்தைப் படித்து விட்டு ரத்தி பயமாய் என்னைப் பார்த்தாள்.
மார்ஷ் பல்பொருள் அங்காடியில் வாங்கிய வாரச் சாமான்களை நானும், அவளும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போதுதான் அதைப் பார்த்தோம்.
அபார்ட்மென்ட் கதவில் ஏ4 அளவில் ஒரு பேப்பர் ஒட்டியிருந்தது.
-5 டிகிரி ·பாரன்ஹீட்டில் ரொம்ப நேரம் நிற்கத் திராணி இன்றி கதவில் ஒட்டியிருந்த அந்த லெட்டரை சரக்கென்று கிழித்துக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே வந்தோம்.
கொட்டை கொட்டையாய் ஆங்கில எழுத்துக்கள்.
பாலூட்டிகள்
திரும்பிப் பார்த்தபோது, ஷங்கரின் முகத்திலும் அதே பயத்தை உணர முடிந்தது. இன்ஷ்யூரன்ஸ் கார்டைக் காட்டி விட்டு, மெதடிஸ்ட் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தோம்.
காருக்கு வந்து, ஜார்ஜ் டவுன் சாலையில் வழுக்கிச் செல்லும் போதும் இருவரும் அமைதியாகவே இருந்தோம். ஆனால் என்னுடைய மவுனமும், ஷங்கரின் மவுனமும் நிறைய பேசிக் கொண்டன.
” கடைசியில் அந்த நாள் வந்தே வந்துருச்சு ஷங்கர். “

