சத்யராஜ்குமார்
எழுதியவை
சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

 
கல்கி
கல்கியில் வெளியான படைப்புகள்.

உள்காயம்

இரண்டாம் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1996 - 07-Aug-1996

நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது.

சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞனுக்குக் குரல் கொடுத்தாள்.

” ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. மெஷின்ல ஏத்து.”

காலையிலிருந்து இந்த நிமிஷம் வரை பூஞ்சோலையை அதிஅதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரத்தினம் சுதாரித்து தன்னருகே ஓடும் தண்டவாளத்தில் பார்வையைப் போட்டான்.

அந்நிய துக்கம்

முதல் பரிசுக் கதை – அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 1994 - 07-Aug-1994